மான்செஸ்டரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் 259 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அணித்தலைவர் ஜோஸ் பட்லர் 60 ஓட்டங்களை பெற்றார். ஹார்திக் பாண்டே 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
பதிலெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு மத்திய வரிசையில் ரிஷாப் பான்ட் ஆட்டமிழக்காது 125 ஓட்டங்களை விளாச அந்த அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
பந்துவீச்சில் சோபித்த பாண்டே 55 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


0 Comments