Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

போலி ஆவணம் மூலம் சட்டவிரோதமாக பிரிட்டனுக்கு கடத்தி வரப்பட்ட உலகப் புகழ்­பெற்ற ஓட்ட வீரர்...!



உலகப் புகழ்­பெற்ற பிரித்­தா­னிய ஓட்ட வீரர் மோ பராஹ், தான் சிறு வயதில் போலி ஆவணம் மூலம் சட்­ட­வி­ரோ­த­மாக பிரிட்­ட­னுக்கு கடத்தி வரப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட மாட்­டாது என பிரித்­தா­னிய உள்­துறை அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இது குறித்து தான் நிம்­ம­தி­ய­டை­வ­தாக சேர் மோ பராஹ் தெரி­வித்­துள்ளார்.



தற்­போது 39 வய­தான மோ பராஹ் (மொஹமத் பராஹ்) 2012, 2016 ஆம் ஆண்­டு­களின் ஒலிம்பிக் போட்­டி­களில் 5,000 மீற்றர் ஓட்டம், 10,000 மீற்றர் ஓட்டம் ஆகி­ய­வற்றில் தங்கப் பதக்­கங்­களை வென்றார். அத்­துடன் உலக சம்­பி­யன்ஷிப் போட்­டி­க­ளிலும் 6 தங்கப் பதக்­கங்­களை அவர் வென்றார்.



சோமா­லி­யாவில் பிறந்த மோ பராஹ்­வுக்கு பிரித்­தா­னிய அரசு சேர் பட்டம் வழங்கி கௌர­வித்­தது.


இந்­நி­லையில், பிபி­சிக்கு அவர் அளித்த செவ்­வியில், தான் 9 வயதில் சட்­ட­வி­ரோ­த­மாக பிரிட்­ட­னுக்கு அழைத்து வரப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்ளார்.

தனது பெயர் மொஹம்மத் பராஹ் அல்ல எனவும், தனது உண்­மை­யான பெயர் ஹுசெய்ன் ஆப்தி காஹின் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

மோ பராஹ் பிறந்த ஊர் தற்­போது சோமா­லி­லாந்து எனக் குறிப்­பி­டப்­படும் பிர­தே­சத்தில் உள்­ளது. சோமா­லி­யா­வி­லி­ருந்து பிரிந்து செல்­வ­தாக 1991 ஆம் ஆண்டு சோமா­லி­லாந்து அறி­வித்­தது. எனினும் எந்த நாடும் அதை அங்­கீ­க­ரிக்­க­வில்லை.

இந்­நி­லையில் பிபிசி ஆவ­ணப்­ப­ட­மொன்றில் பேசி­யுள்ள சேர் மோ பராஹ், தனக்கு 4 வய­தா­ன­போது, தனது தந்தை சோமா­லிய யுத்த்தில் இறந்­த­தாக தெரி­வித்­துள்ளார்

தனக்கு 9 வய­தான போது அறி­மு­க­மில்­லாத பெண் ஒருவர் மூலம் பிரிட்­ட­னுக்கு அழைத்து வரப்­பட்­ட­தாக மோ பராஹ் கூறி­யுள்ளார்.

“மொஹம்மத் பராஹ் எனும் பெய­ரி­லுள்ள ஆவ­ணத்தில் எனது படம் ஒட்­டப்­பட்ட ஆவ­ணத்தை வைத்­தி­ருந்த அப்பெண், எனது பெயர் மொஹம்மத் எனக் கூற வேண்டும் என அறி­வு­றுத்­தினார்” என மோ பராஹ் தெரி­வித்­துள்ளார்.

“ஐரோப்­பா­வி­லுள்ள உற­வி­னர்­க­ளிடம் என்னை அழைத்துச் செல்­வ­தாக அப்பெண் கூறினார். அதனால், நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டைந்தேன். அதற்­குமுன் நான் விமா­னத்தில் ஏறி­ய­தில்லை.

ஆனால், பிரிட்­ட­னுக்கு வந்­தபின், மேற்கு லண்­ட­னி­லுள்ள தனது வீட்­டுக்கு அப்பெண்; என்னை அழைத்துச் சென்றார்.

அங்கு நான் வீட்டு வேலை­களை செய்­வ­துடன் குழந்­தை­க­ளையும் பரா­ம­ரிக்க வேண்­டி­யி­ருந்­தது. பல நாட்கள் நான் குளி­ய­ல­றைக்குச் சென்று நான் அழு­தி­ருக்­கிறேன்” எனத் தெரி­வித்­துள்ளார்.

12 வய­தா­ன­போது தான் பாட­சாலை செல்ல அக்­கு­டும்­பத்­தி­னரால் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும் சேர் மோ பராஹ் தெரி­வித்தார்.

தான் போலி ஆவ­ணத்தில் சட்­ட­வி­ரோ­த­மாக பிரிட்­ட­னுக்கு வந்­தமை குறித்து பராஹ் தெரி­வித்த பின்னர் அவரின் பிரித்­தா­னிய குடி­யு­ரிமை பறிக்­கப்­ப­டுமா என்ற கேள்வி எழுந்தது.

எனினும், அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது என பிரித்­தா­னிய உள்­துறை அமைச்சு அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

இந்த அறி­விப்­பினால் தான் நிம்­ம­தி­ய­டை­வ­தாக சேர் மோ பராஹ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments