Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

அந்தமான் தீவுகள்: இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பலி பீடமாக உருவானது எப்படி?



1857-ல் பஞ்சாபில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய அகமது கான் கரல் கொல்லப்பட்டு, அவரது தோழர்கள் சிலர் தூக்கிலிடப்பட்டனர். சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் 'காலா பானி' என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

'காலா பானி' என்பது பொதுவாக இந்தியத் துணைக் கண்டத்தில் தொலைதூரத்தில் உள்ள இடங்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் சொல்லாகும். நெடுந்தொலைவைக் குறிக்க 'கலா கோஸ்' போன்ற சொலவடைகள் நீண்டகாலமாகப் புழக்கத்தில் உள்ளன.

நாட்டைவிட்டு கடல் கடந்து செல்லும் எவரும் 'புனித கங்கை'யிடம் இருந்து விலகிச்செல்வதால் தங்கள் சாதியைவிட்டும் சமுதாயத்தை விட்டும் விலகுவதாக பண்டைய இந்தியாவில் ஒரு நம்பிக்கை நிலவியது.

அரசியல் பொருளில், காலா பானி என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவைக் குறிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கைதிகளை நாடு கடத்தி அங்கே கொண்டு சென்றனர்.

Post a Comment

0 Comments