Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான முதல் சுற்று தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி...!



பிரிட்டனில் புதிய பிரதமருக்கான முதல் சுற்று தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் வெற்றி பெற்றார்.

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜோன்சன் தனது பிரதமா் பதவியையும் ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி தலைவா் பதவியையும் கடந்த வாரம் இராஜினாமா செய்தார்.

அதனைதொடர்ந்து பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? என்பது உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனின் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார்.

அந்த வகையில் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக், இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டா்னி ஜெனரல் சூவெல்லா பிரேவா்மன், பாகிஸ்தானைப் பூா்விகமாக கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் உள்பட 11 பேர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் காலக்கெடு நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்த நிலையில் சஜித் ஜாவித் உள்பட 3 பேர் போட்டியில் இருந்து பின்வாங்கினர்.

இதன் மூலம் கட்சித்தலைவர் பதவிக்கான முதற்கட்ட தேர்தலில் 8 போட்டியாளா்கள் இருந்தனா்.

Post a Comment

0 Comments