Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

அருண் விஜய்யின் யானை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலித்ததா?




அருண் விஜய் தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் நடிகர்களில் ஒருவர். இவர் இளம் வயதிலேயே நடிக்க வந்தாலும் அவருக்கு பெயர் கொடுக்கும் அளவிற்கு சரியான படம் எதுவும் அமையவில்லை.

பின் அஜித்துடன் என்னை அறிந்தால் படம் நடிக்க அவருக்கு கொஞ்சம் ரீச் கிடைத்தது. அதன்பிறகு அருண் விஜய் நடிக்கும் படங்கள் ரசிகர்களால் கொஞ்சம் கவனிக்கப்பட்டது.

இப்போது அவர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்துள்ளார். படம் தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆக உலகம் முழுவதும் 1200 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

பட வசூல்

ஜுலை 1ம் தேதி ரிலீஸ் ஆன இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர. அருண் விஜய் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் இருவரும் முதன்முறையாக ஜோடி அமைத்து நடித்துள்ள இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ. 12.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

நல்ல விமர்சனம் கிடைத்துள்ள நிலையில் வரும் நாட்களிலும் நல்ல வசூல் வரும் என்கின்றனர்.

Post a Comment

0 Comments